பசியைப் போக்கி ருசியை நீக்கும் பணிகள்
’தந்தையோடு கல்வி போம்; தாயொடு அறுசுவை போம்;’ என்று தந்தையை கல்விக்கும் தாயை ருசிக்கும் முதற்காரணங்களாக நம் முன்னோர்கள் கூறினர். ஆனால் நவீன ஆராய்ச்சி முடிவு ஒன்று இன்றைய பணிச் சுமை நாம் உண்ணும் உணவின் ருசியையே தெரியாமல் ஆக்கி விடுகிறது என்று அச்சுறுத்துகிறது.
வித்தியாசமான ஆனால் விவரமாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப் பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் இதோ: - 60 % மக்கள் சாப்பிடும்போது சுவை என்னனென்றே தெரியாது என்று கூறியுள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் வேலையில் ரொம்ப பிஸியாம்.
- 79 % பேருக்கு அடிப்படை சுவையின் பெயர்கூடத் தெரியவில்லையாம்.
- 88 % பேர் உணவு சாப்பிடும்போது இடையில் பிற பணி குறுக்கிடுகிறதாம்.
- 93 % பேருக்கு உணவு உண்ண நேரப் பற்றாக் குறைபாடாம்... எப்படி இருக்கிறது கதை?
’நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்ற பழமொழியை மறந்ததனால் உணவு சீரண மண்டலக் கோளாறுகள் பலவற்றை அனுபவித்து வருகின்றனர் பலர். அதிலும் உணவின் அடிப்படைச் சுவையைக் கூட உணர முடியாமல் போய்விடுவது கண்களை விற்று ஓவியம் வாங்கிய கதையாகப் போய் விட்டது.
குறிப்பாக இன்றைய ‘பிஸி’ யான உலகில் வாழ்பவர்கள் பலர் உணவு சாப்பிடுவதே உடலுக்கு வலு சேர்க்க மட்டும்தான் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். உணவு சுவைககாகவும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. ருசித்து சாப்பிடும் உணவு எளிதில் சீரணமாகிவிடும் என்பது மருத்துவ உண்மை. எனவே இனிமேல் என்னதான் அவசரமான பணியாக இருந்தாலும் உணவுக்கென்று சற்று நேரம் செலுத்தி உணவை உண்டால் செரிமானம் ஆகும்.
செரிமானப் பிரச்சினைகள், மலச்சிக்கல் உள்ளவர்கள், புகைப்பவர்கள் ஆகியோர்கள் வில்வாவைத் தொடர்ந்து பயன்படுத்திவர இயற்கையாக செரிமானம் பெறலாம்.
No comments:
Post a Comment