நாம் உண்ணும் உணவுகள், சரியான முறையில் செரிமானமாகவில்லை என்றால் அவை நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன குறிப்பாக உணவுகள் சீராக செரிமானம் ஆகவில்லை என்றால் வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிறு இறுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதே பிரச்சனைகள் நீண்ட காலம் நீடித்து வந்தால் அவை கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். முக்கியமாக அல்சர் என்ற வயிற்றுப்புண் போன்ற நோய்களை ஏற்படுத்தும். ஒருசில நேரத்தில் வயிறு முழுவதையும் பாதித்துவிடும்.
அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன.
ஆரோக்கியமாக உள்ளவருக்கு இந்தச் செரிமான நீர்களும் என்சைம்களும் தேவையான நேரத்தில் தேவையான அளவுக்குத் தேவையான இடத்தில் சுரந்து ‘செரிமானம்' எனும் அற்புதப் பணியைச் செய்து முடிக்கின்றன.
அஜீரணம் என்பது என்ன?
அசாதாரணமான நேரங்களில் செரிமானப் பாதையில் உண்டாகும் குறைபாடுகளால் அல்லது நோய்களால் இந்தச் செரிமான நீர்கள் சரியாகச் சுரப்பதில்லை. அப்போது செரிமானம் தடைபடும். இதையே ‘அஜீரணம்' என்கிறோம்.
பொதுவான அறிகுறிகள்
உணவு உண்ட பின் வயிற்றில் ஏற்படும் சுகமின்மை, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வயிற்றில் இரைச்சல். பசிக் குறைவு, வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் அடிக்கடி வாயு பிரிதல், பேதி அல்லது மலச்சிக்கல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வாய்நாற்றம் போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகள்.
பொதுவான காரணங்கள்
அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் இரைப்பையின் சளிப் படலம் சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது தடைபடும். இது அஜீரணத்துக்கு வழி அமைக்கும். விருந்து மற்றும் விழாக் காலங்களில் அளவுக்கு அதிகமாக உணவு உண்பதாலும் அஜீரணம் ஏற்படும்.
எண்ணெயில் வறுத்த மீன், இறைச்சி போன்ற அசைவ உணவு வகைகள் மற்றும் அப்பளம், வடை, இனிப்புப் பண்டங்கள், நெய், வெண்ணெய், டால்டா போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது இரைப்பையில் எண்ணெய் மட்டும் தனியாகப் பிரிந்து மிதக்கும். இதனால் இரைப்பையில் இயல்பாகச் செரிமான நீர்கள் சுரப்பது தடைபட்டு, அஜீரணத்தை வரவேற்கும்.
அதிக அளவு காபி, தேநீர் குடிப்பது, புகைபிடிப்பது, மது அருந்துவது, வெற்றிலை அல்லது பான்மசாலா போடுவது, துரித உணவுகளை அடிக்கடி உண்பது, மென்பானங்களை அளவின்றிக் குடிப்பது போன்றவையும் அஜீரணம் ஏற்படக் காரணமாகலாம்.
நச்சுணவு
தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் ஈக்கள் மொய்க்கும் பண்டங்கள், காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் முன்பு நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால், அவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் குடலுக்குள் நுழைந்து நோய்த்தொற்றை உண்டாக்கலாம்.
அப்போது நோயின் தொடக்க அறிகுறியாக அஜீரணம் தலைகாட்டும். மாசுபட்ட குடிநீரைக் குடித்தாலும், உணவைச் சமைக்கும்போது சுத்தத்தைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், சமையல் பாத்திரங்களில் உலோகக் கலவை சரியில்லை என்றாலும், சுகாதாரம் குறைந்த அசுத்தமான உணவு விடுதிகளில் தொடர்ந்து உணவு சாப்பிடுவது போன்றவற்றாலும் செரிமானப் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டு அஜீரணம் தோன்றும். குழந்தைக்குப் பால்புட்டியைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் பால் புகட்டினால் அஜீரணம் ஏற்படும்
கலப்பட உணவு
உணவு தயாரிக்கும்போது கலப்பட எண்ணெய், கலப்பட உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவது அஜீரணத்தை வரவேற்கும். உணவைச் சரியான அளவில் வேகவைத்துச் சமைக்காவிட்டாலும் இதே நிலைமைதான். வயதுக்கு மீறிச் சத்து மிகுந்த உணவைச் சாப்பிடுவதும், தேவையான அளவுக்குச் சத்துள்ள உணவைச் சாப்பிடும் வயதில் சாப்பிடாததும், குறிப்பாக நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் அஜீரணத்தை உண்டாக்கும்.
உடல் கோளாறுகள்
உடலில் உள்ள சில கோளாறுகளின் ஆரம்ப அறிகுறியாக அஜீரணம் உண்டாகும். உணவுக் குழாய் அழற்சி, உணவுக் குழாய்ப் புற்று, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்று, குடல் புழுக்கள், அமீபா மற்றும் கியார்டியா தொற்றுகள், மஞ்சள் காமாலை உள்ளிட்ட கல்லீரல் நோய்கள், பித்தப்பைக் கோளாறுகள், குடல் கட்டிகள், மூலநோய், காசநோய், ரத்தசோகை, நீரிழிவு, கணைய அழற்சி, கணையப் புற்று, ஒற்றைத் தலைவலி, குளுகோமா, சிறுநீரக நோய், மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட எல்லா வகை தொற்றுக் காய்ச்சல்களும் இந்தப் பட்டியலில் சேரும்.
இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்த்து சிறந்த முறையில் உணவுகள் செரிமானமாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
வெதுவெதுப்பான தண்ணீர்
உணவு செரிமானமாவதில் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனே வெதுவெதுப்பான தண்ணீரை பருகவும். அதிலும் குறிப்பாக காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரைப் பருகினால், உடலில் இருக்கும் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, செரிமானத்திற்குத் தேவையான திரவத்தை மட்டும் சுரக்கச் செய்துவிடும். அதன் மூலம் செரிமானம் தங்கு தடையின்றி நடைபெறும்.
உணவுப் பழக்கம்
சாப்பிடும் போது ஒரு முறையான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது செரிமானப் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும். சாப்பிடும் போது, முதலில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிடத் தொடங்க வேண்டும். பின் படிப்படியாக கடினமான மற்றும் சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதாவது முதலில் பழங்கள் அல்லது பழச் சாறுகள் போன்றவற்றை சாப்பிட்டு, அதற்கு பின்பு அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த பழக்கம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை அனுமதிக்காது. மேலும் அது செரிமான பிரச்சனைகளை மிக எளிதாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.
உணவருந்தும் முறை
உணவருந்தும் முறையிலும் செரிமானக் கோளாறுகள் உள்ளன. எனவே நன்றாக மற்றும் வசதியாக அமர்ந்து கொண்டு, ரசித்து, ருசித்து உணவை சாப்பிட வேண்டும். இவ்வாறு அமர்ந்து உணவருந்தும் போது, வயிறு இறுக்கமாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும். மேலும் அது நன்றாக செரிமானமாக வழிவகுக்கும்
தண்ணீர்
செரிமானம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான வழி, அதிகமாக தண்ணீர் குடிப்பது தான். எனவே நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, அது மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிவகுக்கிறது.
மென்று சாப்பிடுதல்
உணவு அருந்தும் போது, குறைவான அளவு உணவை வாயில் வைத்து, அதை நன்றாகக் கடித்து, மென்று மெதுவாக சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும்
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான செர்ரி, திராட்சை, மிளகு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.
கொழுப்புச்சத்து
செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், கண்டிப்பாக செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். ஆகவே கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை குறைவாக சாப்பிட்டு, மற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்.
நேரம்
மிக எளிதாக செரிமானமாக வேண்டுமென்றால் ஒரு முறையான சாப்பாட்டு நேரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அதே நேரங்களில் உணவை அருந்த வேண்டும். காலம் கடந்து உணவு உண்ணுதல் மற்றும் முறையான நேரம் இல்லாமல் உணவு அருந்துதல் போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
உடல் எடை
குண்டாக இருப்பது மற்றும் அதிக எடையுடன் இருப்பது ஆகியவை அதிகமான செரிமான கோளாறுகள் மற்றும் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். ஆகவே மருத்துவரை அணுகியோ, போதிய டயட்டை மேற்கொண்டோ எடையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறைச்சி
அசைவப் பிரியராக இருந்தால், கொழுப்புச்சத்து அதிகமுள்ள இறைச்சியால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். எனவே கொழுப்புச்சத்து குறைந்த இறைச்சிகள் மற்றும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ஆகியவற்றை உண்ணலாம். அது செரிமானக் கோளாறை அதிகம் ஏற்படுத்தாது.
உடற்பயிற்சி
தினமும் முறையாக உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமானப் பிரச்சனைகள் வராது. மேலும் உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
அதிகமான உணவு
தேவைக்கு அதிகமான உணவை உட்கொண்டால், அது செரிமானப் பிரச்சனைகளை உருவாக்கும். எனவே அளவாக உண்பது எப்போதும் நன்மையைத் தரும்.
மன அழுத்தம்
மன அழுத்தம் இருந்தால், அது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
இரவு உணவு
மாலை நேரங்களில் நமது செரிமான மண்டலத்தின் வேகம் குறைவாக இருக்கும். ஆகவே இரவு நேரங்களில் நேரம் கழித்து உணவு உண்ணாமல் இருப்பது நல்லது. இரவு நேரத்தில் தூங்கும் 2 மணிநேரத்திற்கு முன்பாகவே உணவு அருந்திவிட்டால், அது சீக்கிரம் செரிமானம் ஆகிவிடும்
தவிர்க்க வழி
அஜீரணம் ஏற்பட்டதும் ரோஹிணி மருத்துவரிடம் பரிசோதித்துக் காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப சிகிச்சை பெறுங்கள். சுய சிகிச்சை வேண்டாம். அடுத்து, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்ட சமச்சீர் உணவு வகைகளை அளவோடும் நேரத்தோடும் நிதானத்தோடும் மனநிறைவோடும் உண்ணுங்கள். அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
மோர், இளநீர், பழச்சாறுகள், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள். பெரும்பாலும் ஆவியில் வேக வைத்த உணவு வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், உணவின் ஒரு பகுதியாகத் தினசரி இருக்கட்டும். இரவில் தினமும் இரண்டு பழங்களை உண்ணுங்கள். வயிற்றில் வாயுவை உருவாக்கும் மொச்சை, பயறு, பட்டாணி போன்றவற்றை வயதானவர்கள் தவிர்க்க வேண்டியது முக்கியம். காலையில் எழுந்ததும் நடைப் பயிற்சி, யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யும் பழக்கமும் அவசியம்
வில்வா - மூலிகை பானம்
- ஊட்டச்சத்து மிக்க இனிமையான மூலிகை பானம்
- பாரம்பரியமிக்க தெய்வீக மூலிகையான வில்வம் அடங்கியது
- தொடர்ந்து அருந்துவதால் சீரண உறுப்புகள் பலமடைகின்றன
- குடல் பிரச்சினைகளைத் தடுக்கிறது
- சிறுவர்களுக்குப் பசியைத் தூண்டுகிற சிறந்த பானம்
- வில்வப்பழம், ரோஜா, அதிமதுரம், ஏலக்காய் ஆகிய மூலிகைகள் அடங்கியது
- மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/vilva/
- செரிமான மண்டல உறுப்புகளை வலுப்படுத்துகிறது
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- நெஞ்செரிச்சல், வாய் குமட்டல், வயிற்றுவலி, மலச்சிக்கல் ஆகியவற்றை போக்க உதவுகிறது
- பசித்தீயைத் தூண்டுகிறது
- திரிபலா, திரிகடுகு, நிலாவாரை, காட்டுச்சீரகம் ஆகிய மூலிகைகள் அடங்கியது
- மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/jeerna/
- கல்லீரலின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- மஞ்சள்காமாலை, சிறுநீரக நோய் சிகிச்சைக்கு சிறந்தது
- மது அருந்துவதாலும், புகைப்பிடிப்பதாலும் உண்டாகும் தீங்குகளைக் கட்டுப்படுத்துகிறது
- கீழாநெல்லி, வேப்பிலை, கடுகரோஹிணி, சீமை நிலவேம்பு, கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகைகள் அடங்கியது
- மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/liverem/