Wednesday, July 28, 2021

செரிமானம் சீராக்கும் சிறப்பு மூலிகைகள். அருமையான பதிவு!



நாம் உண்ணும் உணவுகள், சரியான முறையில் செரிமானமாகவில்லை என்றால் அவை நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன குறிப்பாக உணவுகள் சீராக செரிமானம் ஆகவில்லை என்றால் வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிறு இறுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதே பிரச்சனைகள் நீண்ட காலம் நீடித்து வந்தால் அவை கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். முக்கியமாக அல்சர் என்ற வயிற்றுப்புண் போன்ற நோய்களை ஏற்படுத்தும். ஒருசில நேரத்தில் வயிறு முழுவதையும் பாதித்துவிடும்.

அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன.

ஆரோக்கியமாக உள்ளவருக்கு இந்தச் செரிமான நீர்களும் என்சைம்களும் தேவையான நேரத்தில் தேவையான அளவுக்குத் தேவையான இடத்தில் சுரந்து ‘செரிமானம்' எனும் அற்புதப் பணியைச் செய்து முடிக்கின்றன.

அஜீரணம் என்பது என்ன?

அசாதாரணமான நேரங்களில் செரிமானப் பாதையில் உண்டாகும் குறைபாடுகளால் அல்லது நோய்களால் இந்தச் செரிமான நீர்கள் சரியாகச் சுரப்பதில்லை. அப்போது செரிமானம் தடைபடும். இதையே ‘அஜீரணம்' என்கிறோம்.

பொதுவான அறிகுறிகள்

உணவு உண்ட பின் வயிற்றில் ஏற்படும் சுகமின்மை, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வயிற்றில் இரைச்சல். பசிக் குறைவு, வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் அடிக்கடி வாயு பிரிதல், பேதி அல்லது மலச்சிக்கல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வாய்நாற்றம் போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகள்.

பொதுவான காரணங்கள்

அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் இரைப்பையின் சளிப் படலம் சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது தடைபடும். இது அஜீரணத்துக்கு வழி அமைக்கும். விருந்து மற்றும் விழாக் காலங்களில் அளவுக்கு அதிகமாக உணவு உண்பதாலும் அஜீரணம் ஏற்படும்.

எண்ணெயில் வறுத்த மீன், இறைச்சி போன்ற அசைவ உணவு வகைகள் மற்றும் அப்பளம், வடை, இனிப்புப் பண்டங்கள், நெய், வெண்ணெய், டால்டா போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது இரைப்பையில் எண்ணெய் மட்டும் தனியாகப் பிரிந்து மிதக்கும். இதனால் இரைப்பையில் இயல்பாகச் செரிமான நீர்கள் சுரப்பது தடைபட்டு, அஜீரணத்தை வரவேற்கும்.

அதிக அளவு காபி, தேநீர் குடிப்பது, புகைபிடிப்பது, மது அருந்துவது, வெற்றிலை அல்லது பான்மசாலா போடுவது, துரித உணவுகளை அடிக்கடி உண்பது, மென்பானங்களை அளவின்றிக் குடிப்பது போன்றவையும் அஜீரணம் ஏற்படக் காரணமாகலாம்.

நச்சுணவு

தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் ஈக்கள் மொய்க்கும் பண்டங்கள், காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் முன்பு நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால், அவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் குடலுக்குள் நுழைந்து நோய்த்தொற்றை உண்டாக்கலாம்.

அப்போது நோயின் தொடக்க அறிகுறியாக அஜீரணம் தலைகாட்டும். மாசுபட்ட குடிநீரைக் குடித்தாலும், உணவைச் சமைக்கும்போது சுத்தத்தைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், சமையல் பாத்திரங்களில் உலோகக் கலவை சரியில்லை என்றாலும், சுகாதாரம் குறைந்த அசுத்தமான உணவு விடுதிகளில் தொடர்ந்து உணவு சாப்பிடுவது போன்றவற்றாலும் செரிமானப் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டு அஜீரணம் தோன்றும். குழந்தைக்குப் பால்புட்டியைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் பால் புகட்டினால் அஜீரணம் ஏற்படும்

கலப்பட உணவு

உணவு தயாரிக்கும்போது கலப்பட எண்ணெய், கலப்பட உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவது அஜீரணத்தை வரவேற்கும். உணவைச் சரியான அளவில் வேகவைத்துச் சமைக்காவிட்டாலும் இதே நிலைமைதான். வயதுக்கு மீறிச் சத்து மிகுந்த உணவைச் சாப்பிடுவதும், தேவையான அளவுக்குச் சத்துள்ள உணவைச் சாப்பிடும் வயதில் சாப்பிடாததும், குறிப்பாக நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் அஜீரணத்தை உண்டாக்கும்.

உடல் கோளாறுகள்

உடலில் உள்ள சில கோளாறுகளின் ஆரம்ப அறிகுறியாக அஜீரணம் உண்டாகும். உணவுக் குழாய் அழற்சி, உணவுக் குழாய்ப் புற்று, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்று, குடல் புழுக்கள், அமீபா மற்றும் கியார்டியா தொற்றுகள், மஞ்சள் காமாலை உள்ளிட்ட கல்லீரல் நோய்கள், பித்தப்பைக் கோளாறுகள், குடல் கட்டிகள், மூலநோய், காசநோய், ரத்தசோகை, நீரிழிவு, கணைய அழற்சி, கணையப் புற்று, ஒற்றைத் தலைவலி, குளுகோமா, சிறுநீரக நோய், மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட எல்லா வகை தொற்றுக் காய்ச்சல்களும் இந்தப் பட்டியலில் சேரும்.

இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்த்து சிறந்த முறையில் உணவுகள் செரிமானமாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

வெதுவெதுப்பான தண்ணீர்

உணவு செரிமானமாவதில் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனே வெதுவெதுப்பான தண்ணீரை பருகவும். அதிலும் குறிப்பாக காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரைப் பருகினால், உடலில் இருக்கும் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, செரிமானத்திற்குத் தேவையான திரவத்தை மட்டும் சுரக்கச் செய்துவிடும். அதன் மூலம் செரிமானம் தங்கு தடையின்றி நடைபெறும்.

உணவுப் பழக்கம் 

சாப்பிடும் போது ஒரு முறையான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது செரிமானப் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும். சாப்பிடும் போது, முதலில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிடத் தொடங்க வேண்டும். பின் படிப்படியாக கடினமான மற்றும் சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதாவது முதலில் பழங்கள் அல்லது பழச் சாறுகள் போன்றவற்றை சாப்பிட்டு, அதற்கு பின்பு அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த பழக்கம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை அனுமதிக்காது. மேலும் அது செரிமான பிரச்சனைகளை மிக எளிதாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.

உணவருந்தும் முறை 

உணவருந்தும் முறையிலும் செரிமானக் கோளாறுகள் உள்ளன. எனவே நன்றாக மற்றும் வசதியாக அமர்ந்து கொண்டு, ரசித்து, ருசித்து உணவை சாப்பிட வேண்டும். இவ்வாறு அமர்ந்து உணவருந்தும் போது, வயிறு இறுக்கமாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும். மேலும் அது நன்றாக செரிமானமாக வழிவகுக்கும்

தண்ணீர்

செரிமானம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான வழி, அதிகமாக தண்ணீர் குடிப்பது தான். எனவே நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, அது மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிவகுக்கிறது.

மென்று சாப்பிடுதல் 

உணவு அருந்தும் போது, குறைவான அளவு உணவை வாயில் வைத்து, அதை நன்றாகக் கடித்து, மென்று மெதுவாக சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும்

நார்ச்சத்துள்ள உணவுகள் 

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான செர்ரி, திராட்சை, மிளகு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.

கொழுப்புச்சத்து 

செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், கண்டிப்பாக செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். ஆகவே கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை குறைவாக சாப்பிட்டு, மற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்.

நேரம் 

மிக எளிதாக செரிமானமாக வேண்டுமென்றால் ஒரு முறையான சாப்பாட்டு நேரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அதே நேரங்களில் உணவை அருந்த வேண்டும். காலம் கடந்து உணவு உண்ணுதல் மற்றும் முறையான நேரம் இல்லாமல் உணவு அருந்துதல் போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.

உடல் எடை 

குண்டாக இருப்பது மற்றும் அதிக எடையுடன் இருப்பது ஆகியவை அதிகமான செரிமான கோளாறுகள் மற்றும் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். ஆகவே மருத்துவரை அணுகியோ, போதிய டயட்டை மேற்கொண்டோ எடையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இறைச்சி 

அசைவப் பிரியராக இருந்தால், கொழுப்புச்சத்து அதிகமுள்ள இறைச்சியால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். எனவே கொழுப்புச்சத்து குறைந்த இறைச்சிகள் மற்றும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ஆகியவற்றை உண்ணலாம். அது செரிமானக் கோளாறை அதிகம் ஏற்படுத்தாது.

உடற்பயிற்சி 

தினமும் முறையாக உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமானப் பிரச்சனைகள் வராது. மேலும் உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

அதிகமான உணவு

தேவைக்கு அதிகமான உணவை உட்கொண்டால், அது செரிமானப் பிரச்சனைகளை உருவாக்கும். எனவே அளவாக உண்பது எப்போதும் நன்மையைத் தரும்.

மன அழுத்தம் 

மன அழுத்தம் இருந்தால், அது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

இரவு உணவு 

மாலை நேரங்களில் நமது செரிமான மண்டலத்தின் வேகம் குறைவாக இருக்கும். ஆகவே இரவு நேரங்களில் நேரம் கழித்து உணவு உண்ணாமல் இருப்பது நல்லது. இரவு நேரத்தில் தூங்கும் 2 மணிநேரத்திற்கு முன்பாகவே உணவு அருந்திவிட்டால், அது சீக்கிரம் செரிமானம் ஆகிவிடும்

தவிர்க்க வழி

அஜீரணம் ஏற்பட்டதும் ரோஹிணி மருத்துவரிடம் பரிசோதித்துக் காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப சிகிச்சை பெறுங்கள். சுய சிகிச்சை வேண்டாம். அடுத்து, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்ட சமச்சீர் உணவு வகைகளை அளவோடும் நேரத்தோடும் நிதானத்தோடும் மனநிறைவோடும் உண்ணுங்கள். அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

மோர், இளநீர், பழச்சாறுகள், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள். பெரும்பாலும் ஆவியில் வேக வைத்த உணவு வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

 நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், உணவின் ஒரு பகுதியாகத் தினசரி இருக்கட்டும். இரவில் தினமும் இரண்டு பழங்களை உண்ணுங்கள். வயிற்றில் வாயுவை உருவாக்கும் மொச்சை, பயறு, பட்டாணி போன்றவற்றை வயதானவர்கள் தவிர்க்க வேண்டியது முக்கியம். காலையில் எழுந்ததும் நடைப் பயிற்சி, யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யும் பழக்கமும் அவசியம்


வில்வா - மூலிகை பானம்

  • ஊட்டச்சத்து மிக்க இனிமையான மூலிகை பானம்
  • பாரம்பரியமிக்க தெய்வீக மூலிகையான வில்வம் அடங்கியது
  • தொடர்ந்து அருந்துவதால் சீரண உறுப்புகள் பலமடைகின்றன
  • குடல் பிரச்சினைகளைத் தடுக்கிறது
  • சிறுவர்களுக்குப் பசியைத் தூண்டுகிற சிறந்த பானம்
  • வில்வப்பழம், ரோஜா, அதிமதுரம், ஏலக்காய் ஆகிய மூலிகைகள் அடங்கியது
  • மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/vilva/

ஜீரணா - மூலிகை கேப்சூல்



  • செரிமான மண்டல உறுப்புகளை வலுப்படுத்துகிறது
  • செரிமானத்தை மேம்படுத்துகிறது
  • நெஞ்செரிச்சல், வாய் குமட்டல், வயிற்றுவலி, மலச்சிக்கல் ஆகியவற்றை போக்க உதவுகிறது
  • பசித்தீயைத் தூண்டுகிறது
  • திரிபலா, திரிகடுகு, நிலாவாரை, காட்டுச்சீரகம் ஆகிய மூலிகைகள் அடங்கியது
  • மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/jeerna/
லிவரம் - மூலிகை கேப்சூல்



  • கல்லீரலின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
  • செரிமானத்தை மேம்படுத்துகிறது
  • மஞ்சள்காமாலை, சிறுநீரக நோய் சிகிச்சைக்கு சிறந்தது
  • மது அருந்துவதாலும், புகைப்பிடிப்பதாலும் உண்டாகும் தீங்குகளைக் கட்டுப்படுத்துகிறது
  • கீழாநெல்லி, வேப்பிலை, கடுகரோஹிணி, சீமை நிலவேம்பு, கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகைகள் அடங்கியது
  • மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/liverem/


Saturday, July 24, 2021

மூட்டுவலி போயே போச்சு .. படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

 


இன்றைய பரபரப்பான சூழலில் நோய்களுக்குப் பஞ்சமில்லை. சற்று வயதாக ஆரம்பித்தாலே நோய்கள் தேடி வருகின்றன. அந்த வகையில் இப்போது வயதானவர்கள் என்றில்லை வயதுவித்தியாசமின்றி  மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் எலும்புகள் இணையும் இடம்தான் மூட்டு. இதில் தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய ஆறு மூட்டுகள் முக்கியமானவையாகும்.

 

வலி எதனால் வருகிறது?

'மூட்டுவலி" வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக்கொள்கிறோம். வயதாகும்போது, உடல்சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால், மூட்டுவலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோயல்ல.

உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய், சர்க்கரைநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு  மூட்டுவலி இருக்கும்.

சரியான சிகிச்சை எடுக்காதபட்சத்தில் காலப்போக்கில் அதன் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகுத்தண்டுவடம், கழுத்து, தோள்பட்டை, கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் வலி ஏற்படலாம்.

இவற்றில் பொதுவாக அதிகமானோரைப் பாதிப்பது இடுப்புவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டு மற்றும் தோள்பட்டை வலி.  நீண்டநாள் (Chronic) பாதிப்பு வகைகளில் ஒன்றான மூட்டு வலியில், வலி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும்.

எனவே, முதல்நிலையிலேயே பிரச்சனையைக் கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்வியலில் மாற்றங்களைச் செய்வது, சிகிச்சை போன்றவற்றால் வருங்காலத்தில் பாதிப்பின் தீவிரம் குறைக்கலாம்.

உதாரணமாக, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றை சரியாகச்  செய்யவேண்டும். அதேநேரம், எந்தெந்த உடல் அசைவுகளைத் தொடர்ந்து செய்தால் பாதிப்பு அல்லது வலிஉணர்வு அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி உட்கார்ந்து எழுவது, படிக்கட்டுகளில் அதிகம் ஏறுவதால் வலி எடுத்தால் அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

 

பாதிப்புகள் என்ன?

  1. உடலின் உள்பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்,

  2. ஆர்த்ரைட்டிஸ் (arthritis) என்ற மூட்டு வீக்கம்

  3.  முடக்குவாதம்

  4. எலும்பில் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது

  5. எலும்ப்புப்புரை (Osteoporosis)

  6. எலும்பு நோய் (Rickets)

  7. எலும்பைச் சுற்றியுள்ள இணைப்புப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது

  8. 'ஹெபடைட்டிஸ்' போன்ற தொற்றுநோய் பிரச்னைகள்

  9. மூட்டில் கடுமையாக வலி எடுப்பது, எலும்பு வீக்கம், கௌட் (gout) போன்றவையும் மூட்டுக் கோளாறைக் குறிக்கும்

  10. கை, கால்மூட்டுகள் மற்றும் உடலில் இரண்டு எலும்புகள் கூடும் இணைப்புகளில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு இருந்தால் அது ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையாக இருக்கக்கூடும். தேய்மானம், 'முடக்கு வாதம்' (Rheumatoid arthritis) பாதிப்பு மற்றும் 'சர்விக்கல் ஸ்பாண்டுலோசிஸ்' (Cervical spondylosis) ஆகியவை மிகவும் பிரதானமான பாதிப்புகள்

 

அறிகுறிகள் என்னென்ன? 

·        மூட்டு வீக்கம்

·        மூட்டுப்பகுதியில் சூடான உணர்வு

·        மூட்டு சிவந்து காணப்படுவது

·        ஒரு வாரத்துக்கும் மேலான தீவிர மூட்டுவலி

·        படிக்கட்டுகளில் ஏற மிகவும் சிரமப்படுவது

 

செய்யவேண்டியவை

  • நீங்கள் சோர்வாக உணரத் தொடங்கும் போது பிற்பகலில் குறைந்தது 1 மணிநேரம் ஓய்வெடுக்கவும்
  • வலியைக் குறைக்க ஐஸ் பையைப் பயன்படுத்துங்கள்
  • உடற்பயிற்சியின் முன் தசைகள் ஓய்வெடுக்க ஒரு சூடான குளியல் எடுத்துக் கொள்ளுங்கள்
  • வீக்கம் குறைந்தவுடன் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்யுங்கள்
  • ஆடை, குளியல், சமையல், வேலை மற்றும் பிற செயல்பாடுகளுக்கு உங்களுக்கு உதவ கிடைக்கக்கூடிய சாதனங்களைப் பயன்படுத்துங்கள்
  • உங்கள் பணிகளை எளிதில் முடிக்க வீட்டிலும், வேலையிலும் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்யுங்கள்

செய்யக்கூடாதவை

  • நீண்ட நேரம் படுக்கையில் இருக்க வேண்டாம்
  • அதிக உடற்பயிற்சி வேண்டாம்
  • சிறிய அளவில் தினசரி உடற்பயிற்சி செய்வது சிறந்தது
  • தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்
  • தவறாமல் உடற்பயிற்சி செய்ய மறக்காதீர்கள்
  • நாள் முழுவதும் வீட்டில் இருக்க வேண்டாம்; நீங்கள் வேலைக்குச் செல்லவில்லை என்றால், தன்னார்வலராக அல்லது கிளப்பில் (Club) சேரவும்
  • உங்கள் உடல்நலம் குறித்த உங்கள் அச்சங்களையும் கவலைகளையும் அல்லது சோகம் அல்லது மனச்சோர்வின் உணர்வுகளையும் நீங்களே வைத்திருக்க வேண்டாம். குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.


மெக்னி - மூலிகை வலிநிவாரணி



1.மூலிகை வலி நிவாரணத் தைலம்

2.மூட்டுவலி,  வீக்கம் இவற்றை நீக்குகிறது

3.இரத்தக்கட்டு, தாபிதம் இவற்றை வலியின்றி கரைக்கிறது

4.பிரண்டை, ஜாதிப்பத்திரி, இஞ்சி மூலிகைகள் சேர்ந்தது

5.மேலும் விவரங்களுக்கு 

http://rohiniherbalaya.com/product/megni/


      ஆர்த்திரிட்டோ   இயற்கை மூட்டுவலி கேப்சூல்



1.மூட்டுகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது

2.வலி மற்றும் அழற்சியின் காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது

3.வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது

4.கடுக்காய்த்தோல், குக்குலு, நீர்முள்ளி, அமுக்கிராக்கிழங்கு ஆகிய மூலிகைகள் அடங்கியது

5. மேலும் விவரங்களுக்கு 

http://rohiniherbalaya.com/product/arthrito/



                ஹெர்போமால்ட்   மூலிகை உணவு



1.அனைத்து வயதினருக்கும் தேவையான ஆரோக்கிய பானம்

2.உடலுக்கு வன்மையளிக்கும் அமுக்கிராக்கிழங்கு சேர்ந்த பானம்

3.எலும்புகள் தேய்மானத்தை தடுத்து, மூட்டுவலி வராமல் பாதுகாக்கிறது

4.முளைக்கட்டிய பாசிப்பயறு, மூக்கடலை, கேழ்வரகு, மக்காச்சோளம், அமுக்கிராக்கிழங்கு, கோதுமை ஆகிய மூலிகைகள் அடங்கியது

5. மேலும் விவரங்களுக்கு 

http://rohiniherbalaya.com/product/herbomalt/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 








Thursday, July 22, 2021

கொழுப்புக்கு இனி வேலை இல்லை .. இதப்படிங்க முதல்ல !

 

கொழுப்பு:

கொலஸ்ட்ரால் என்றாலே, உடலுக்குக் கெடுதல் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் (High-density lipoprotein), கெட்ட கொலஸ்ட்ரால் (Low-density lipoprotein) என இரு வகைகள் உள்ளன. குழந்தை கருவில் வளரும் போதே குழந்தையின் உறுப்புகள் வளரத்தொடங்கும் நிலையில் கொழுப்பு செல்களும் உருவாக தொடங்குகிறது. அதன்பிறகு அந்தக் குழந்தை பருவ வயதை எட்டியதும் அவர்களது பாலினத்துக்கேற்ப ஹார்மோன் தூண்டுதலில் அந்த உடல் நிலைக்கேற்ப கொழுப்பு படிய தொடங்குகிறது. சாதாரணமான வளர்ச்சியில் கொழுப்பு படிவத்தில் மாற்றம் இருக்காது. ஆனால் உடல் வளர்ச்சியில் உடல் எடையில் மாற்றம் இருக்கும் போது கூடுதல் கொழுப்பு படிவதற்கு வாய்ப்பு உண்டு.

அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளது எல்டிஎல் கொலஸ்ட்ரால். இது இதய ரத்தக் குழாய்களின் உட்பகுதியில் ஒட்டும் தன்மை உடையது; (இது கெட்டது) ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் அடர்த்தி அதிகம் உள்ளது, (நல்லது) இது ரத்தக் குழாயின் உட்பகுதியில் ஒட்டாமல், புரதத்தோடு சேர்ந்து ரத்தத்தில் பயணிக்கும். நாள்முழுக்க உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். நம் உடலில் எப்போதும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும். நொறுக்குத்தீனிகளைக் குறைத்து ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

கொழுப்பின் வகைகளும் இருக்க வேண்டிய அளவுகளும்:

உடலில் மொத்த கொழுப்பின் அளவு 200 மி.கி. அளவுக்கு மேல் செல்லும் போது மாரடைப்புக்கான வாய்ப்புகள் உருவாகிறது. அதே நேரம் ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் 35 மி.கிராமுக்கு குறைவாக இருந்தால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த நல்ல கொழுப்பு 50 மி.கிராமுக்கு அதிகரிக்கும் போது இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது. சுருங்க சொன்னால், ஆண்களுக்கு நல்ல கொழுப்பு என்பது 40 கிராமுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு 25 கிராமுக்கு அதிகமாகவும் இருத்தல் வேண்டும்.

அதே போன்று கெட்ட கொழுப்பு 139 மி.கிராம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும்.ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் இருபாலருக்கும் கெட்ட கொழுப்புகள் அதிகம் உடலில் தங்கி விடுவதோடு நல்ல கொழுப்புகளின் அளவும் குறைந்தே காணப்படுகிறது. இதனால் நடுத்தர வயதிலேயே இதய நோய் சம்பந்தமான பாதிப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.

கொழுப்பு இப்படித்தான் உருவாகிறது:

நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகி அதில் இருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொழுப்பு குடலில் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. உடல் உறுப்புகளுக்கு வேண்டிய போது கொழுப்பை வெளிவிடவும், உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் கல்லீரலே செயல்படுகின்றது.

கொழுப்புக்கு என்ன வேலை:

கொழுப்பு உடலில் இருக்கும் செல்களைச் சீராக செயல்புரிய வைக்கும் பணியை செய்கிறது. பித்தநீர்சுரக்க உதவி புரிவதோடு உணவில் இருக்கும் கொழுப்பு மற்றும் கரையும் வைட்டமின் ஏ,டி,ஈ,கே போன்றவற்றை இரத்தத்தில் கலக்க செய்கிறது. மூளையின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் துணை புரிகிறது. ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்புக்கு பயன்படுகிறது

பெரும்பாலும் கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால், அது மூன்று பகுதிகளில் அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும்.

கைகளில் வலி : தமனிகளின் உட்புறத்தில் கொழுப்புக்கள் குவிந்திருக்கும் போது, கொலஸ்ட்ரால், கொழுப்புப் பொருட்கள், செல்லுலார் கழிவுப் பொருட்கள், கால்சியம் மற்றும் ஃபைப்ரின் ஆகியவற்றால் ஆன ஒரு கட்டி உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாகும் கட்டிகள் இரத்த ஓட்டத்தில் தடை மற்றும் இடையூறை ஏற்படுத்துகிறது. இது தான் பெருந்தமனி தடிப்பு அழற்சி என்னும் நிலையை உண்டாக்குகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் கைகளில் வலியை உணரக்கூடும்.

சருமத்தில் வளர்ச்சி : சருமத்தில் திடீரென்று மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தில் வளர்ச்சியைக் கண்டால், உங்கள் சருமத்தின் கீழ் கொழுப்புக்கள் தேங்கி இருக்கலாம். ஒருசிலருக்கு கண்களின் கீழே கோடுகளைக் காணலாம். இந்த வலியற்ற தேக்கங்கள் உங்கள் உள்ளங்கைகளிலோ அல்லது உங்கள் கால்களின் பின்புறத்திலோ தென்படலாம். இம்மாதிரியான வளர்ச்சிகளை நீங்கள் உங்கள் உடலில் கண்டால், உடனே ரோஹிணி மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

நீல நிற வளையம் : சிலருக்கு, கார்னியாவின் வெளிப்பகுதிக்கு மேலேயும், கீழேயும் நீல நிற அல்லது சாம்பல் நிற அல்லது வெள்ளை நிற வளையம் நன்கு தெளிவாக காணப்படும். இந்நிலை "ஆர்கஸ் செனிலிஸ்" என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது வயதானதற்கான ஒரு சாதாரண அடையாளமாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்நிலை 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் போது, இதற்கு ஹைப்பர்லிபிடெமியா காரணமாகும் மற்றும் இது பெரும்பாலும் இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையது.

கெட்ட கொழுப்புகளை உண்டாக்கும் உணவு வகைகள்

இன்றைய சூழ்நிலையில் அனைவரும் வயது பேதமின்றிஅடிமையாகி கிடப்பது கெட்ட கொழுப்புகளை உண்டாக்கும் உணவு வகைகளின் மீதுதான். கடைகளில்கொழுப்பில்லாத உணவு வகைகள் என்று குறிக்கப்பட்டிருக்கும் பாக்கெட் உணவு பொருள்களிலும் அதிகப்படியான சர்க்கரையும், கலோரியும் இணைந்து உடலுக்கு கேடையே தரும் என்பதை மறந்து விடுகிறோம். வேகவைத்த காய்கறிகளின் இடத்தை நீக்கமற நிறைத்திருக்கும் எண்ணெயில் வறுத்த, பொரித்த அசைவ மற்றும் க்ரிஸ்பி உணவுகள் அனைத்துமே உடலில் அதிக கொழுப்புகளை உண்டாக்கி அதை வெளியேற செய்யாமல் உடல் பருமனுக்கு உள்ளாக்கிவிடுகிறது. இவை தவிர ஐஸ்க்ரீம், பேக்கரி வகைகள், தொடர்ந்து சாக்லெட், வெள்ளை சர்க்கரை கலந்த இனிப்பு வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, கோழி, ஆடு,மாடு, பன்றி இறைச்சி வகைகள் (அளவுக்கு அதிகமாக தொடர்ந்து எடுக்கும் போது) போன்றவற்றை எடுக்கும் போது இதிலிருக்கும் கொழுப்புகள் கல்லீரலில் வேகமாக கொழுப்பாக மாறி இரத்தத்தில் கலந்து உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவை மிகுதியாக்கிவிடுகிறது.

 

மாற்றுவழி இல்லையா?

முக்கியமானது, நம் வாழ்க்கை முறை.

* ரோஹிணி ஆரோக் மூலிகை சுடுபானம் தினமும் அருந்துவது

* வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்புப் பயன்பாட்டைக் குறைப்பது,

* முழுத் தானிய உணவு வகையை உண்பது,

* துரித உணவு வகையைத் தவிர்ப்பது,

* அதிக கொழுப்புள்ள இறைச்சி/ எண்ணெய் வகையைக் குறைப்பது,

* மீன், காய்கறி, பழங்கள், கொட்டை உணவு வகையை அதிகம் உண்பது,

* பேக்கரி உணவையும் நொறுக்குத் தீனியையும் தவிர்ப்பது,

* புகைப்பதை நிறுத்துவது,

* மதுவை மறப்பது,

* மன அழுத்தம் குறைப்பது,

* தேவையான ஓய்வு எடுப்பது,

* நடைப்பயிற்சி /யோகா/ தியானம் மேற்கொள்வது

இதுபோன்ற ஆரோக்கிய வழிமுறைகளைச் சிறு வயதிலிருந்தே கடைப்பிடித்தால் கெட்ட கொலஸ்டிராலுக்கு ரத்தத்தில் இடமில்லாமல் போகும். நல்ல கொலஸ்டிரால் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளும்.




ஆரோக்

மூலிகைத் தேநீர்

1. தாமரை கலந்த ஆரோக்கிய மூலிகை சுடுபானம்

2. இதய சுழற்சியை முறைப்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

3. உடலின் தேவையற்ற கொழுப்புகளை எளிமையாக நீக்குகிறது
தொடர்ந்து அருந்தும்போது மன அழுத்தத்தையும், மனஇறுக்கத்தையும் நீக்குகிறது

4. தாமரை, ரோஜா, செம்பரத்தைப் பூ, மாசிக்காய், அதிமதுரம், கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகைகள் அடங்கியது


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 




Tuesday, July 6, 2021

பல் போனால் சொல் போகும் .. இதப்படிங்க முதல்ல ...

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான். வாயை  'உடலின் நுழைவாயில்' என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். 'பல்'லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம்.

 

பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி? பற்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி? பல் மருத்துவர்கள் விரிவாக ஆலோசனை தருகிறார். 


பல்லின் அமைப்பு..

.

"பற்களை மொத்தம் 8 வகையாகப் பிரிக்கலாம். அதிலும், இடப்பக்கம் எட்டும் வலது பக்கம் எட்டும் என மேல் அடுக்கு 16 அதன் கண்ணாடி பிரதிபலிப்பைப் போல கீழ் அடுக்கு 16 என, ஒரு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு  மொத்தம் 32 பற்கள் உள்ளன.

 

'பல் போனால் சொல் போகும்' என்னும் பழமொழிக்கேற்ப, நாம் பேச உதவுபவை பற்கள்தான். நாம் பேசும்போது குரல்வளையில் இருந்துவரும் காற்றானது பற்களின் இடுக்குகளில் மோதி வெளிவரும்போது குரல் பிறக்கிறது. பல் ஆரோக்கியம் என்பது முக அழகுக்காக மட்டுமல்ல... இதயநோய்கள், சர்க்கரை நோய்கள், வயிற்றுக்கோளாறுகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில்தான் பிரதிபலிக்கும். 

 

வாய் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்கள்…

1. பல் சொத்தை

2. நீண்ட நேரம் பற்களுக்கு இடையில் உணவு இருப்பதாலோ சரியாக பல்        துலக்காததாலோ பல் சொத்தை ஏற்படும். 

3.எச்சிலில் உள்ள ஆசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்            இரண்டும் சேர்ந்து பல் சொத்தையை உருவாக்கும். 

4. பல் கறைகள்

5. புகையிலைப் பொருள்களை நீண்ட நேரம் வாயில் வைத்திருப்பது,         மதுப்பழக்கம், டீ, காபி போன்றவற்றை அதிக அளவு குடிப்பது, சரியாகப் பல் துலக்காதது  போன்ற செயல்களால் பற்களில் கறை உண்டாகும்.

6. சிலருக்கு பிறப்பு முதலே கறை இருக்கும். குடிக்கும் நீரில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பற்களில் கறை உண்டாகலாம்.

7. பல் வலி

8. பல் சொத்தை வளர்ந்து பெரிதாகும்போது பல்லின் வேரைத் தாக்கும். அப்போது பல் வலி ஏற்படும். 

9. வாய் துர்நாற்றம் 

10. வயிற்றில் கோளாறுகள் ஏற்படும்போது, அதில் உள்ள அமிலங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். 

11. அல்சர் நோய் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்னை இருக்கும்

12. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலோ, நாக்கில் எச்சில் சுரக்காமல் போனாலோ,  தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பி, சுரத்தலில் தடைகள் ஏற்பட்டாலோ, உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் பிரச்னைகள் இருந்தாலோ, உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் தங்கினாலோ, அசிடிட்டி ஏற்பட்டாலோ வாய் துர்நாற்றம் ஏற்படலாம். 

13. பற்களின் இடுக்குகளில் கிருமிகள் சேர்வதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். 

14. சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

15. ஈறுகளில் வீக்கம்...

16. பற்கள் மீது பாக்டீரியாக்கள் படிவதால் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். 17. முறையாக பற்களைப் பராமரிக்காவிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஈறுகள் வீங்கிவிடும். வைரஸ் கிருமி தொற்று, மனஅழுத்தம், சர்க்கரைநோய், குடிப்பழக்கம், புகையிலைப் பழக்கம், கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும்.

18. பற்கூச்சம்

19. எனாமல் தேய்வதாலும், அதிகக்  குளிர்ச்சி அல்லது சூடான உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் பற்கூச்சம் ஏற்படும்.

 

பற்களின் ஆரோக்கியத்தைப் பதம்பார்க்கும் எட்டு பழக்கங்கள்!

1. அதிகப்படியான இனிப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும், அவற்றை நீண்டநேரம் வாயில் வைத்திருப்பதால் பல் சொத்தை, பல்வலி, பற்சிதைவு போன்றவை ஏற்படும்.

2. சோடா, கார்பனேட்டட் பானங்கள், டீ, காபி போன்றவற்றை  அதிகம் பருகக்கூடாது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை பல்லின் எனாமலை பாதிக்கும். மாறக, இளநீர், பழச்சாறு பருகலாம்.

3. புகைப்பழக்கம், பாக்கு போடுபவர்களுக்கு ஈறுகளில் பாதிப்பு ஏற்படும். அவை, பற்கள் விழுவதற்கான  வாய்ப்புகளை அதிகமாக்கும். மேலும், பற்களில் கறையையும் உண்டாக்கும்.

4. குழந்தைகள் பால் குடித்தபின்னர், பற்களை சுத்தம் செய்யாமல் விட்டால் பால் பற்களைப் பாதிக்ககூடும்

5. பற்களை பாட்டில்களின் ஓப்பனராகப் பயன்படுத்துவது. பாலித்தின் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து கிழிப்பது போன்ற செயல்களால் பல்லின் உறுதித் தன்மையில் பாதிப்பு ஏற்படும்.

6. நகம் கடித்தல், கோபம் அல்லது மனஉளைச்சலின்போது பற்களைக் கடித்தல் போன்ற பழக்கங்கள் பற்சிதைவை உண்டாக்கக்கூடும். பற்கள் தேயக்கூடும்.

7. சீரற்ற முறையில் பல் துலக்குவதால் பற்களின் எனாமல் பாதிக்ககூடும்

8. குளிந்த மற்றும் சூடான உணவுகளை உண்ணுவது பற்கூச்சத்தை ஏற்படுத்தும்.

 

ரோஹிணி வழங்கும் தீர்வு





1. இயற்கை மூலிகைகள் அடங்கிய ரூமி குளோடென்ட் தினமும் இரண்டுமுறை பல் துலக்கி வர ஈறுகளில் இரத்தம் வடிதலை நிறுத்தி பற்களை வலுப்படுத்திகிறது. நாவில் படியும் படலங்களைத் தடுத்து பற்களை வலிமை ஆக்குகிறது

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/glodent/ 




2. இயற்கை மூலிகைகள் கலந்த ரூமி ஹெர்பல் ஃப்ரஷ் தினமும் உணவருந்திய பின்பு பயன்படுத்தி வர வாய் துர்நாற்றத்தைப் போக்கி வாய்ப்புண்களை குணப்படுத்துகிறது. 


மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/herbal-fresh/





செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...