வல்லாரைத் துவையல்
தேவையானவை:
வல்லாரைக்கீரை - ஒரு
கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்),
கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
தோலுரித்த சின்ன வெங்காயம் - 10,
புளி - சிறிதளவு,
சீரகம் - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு
கடலைப்பருப்பு, கறுப்பு உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதனுடன்
வெங்காயம், காய்ந்த மிளகாய், கீரை, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
ஆறிய பின் புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு
எண்ணெய்விட்டு கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து
துவையலுடன் கலந்து பரிமாறலாம்.
பயன்:
ஞாபகசக்தியைத் தூண்டும்.
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மருந்தாகும்.
ரோஹிணி வழங்கும் மூலிகை
உணவு:
ரூமி விவேகா மூலிகை பானம்
வல்லாரை சேர்ந்த மூலிகை பானம். தொடர்ந்து பயன்படுத்தும்போது மாணவர்களின் கற்கும்
திறன் அதிகரித்து கவனத்துடன் படிக்க வைக்க உதவுகிறது. மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/viveha/
தொடர்புக்கு :
ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி – 9677009443 / 044 – 40194570
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833