அதிகமான உணவு உண்ட பின்னரோ இரவில் தாமதமாக உணவு உண்டு தூங்கி எழுந்த பின்னரோ, வயிறு உப்பிசம் பொதுவாக ஏற்படும். இப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், மூல நோய் தோன்றும்.
வயிறு உப்பிசம் ஏற்பட
உடனடி உணவுகள் மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை அதிகம் அருந்துவது தான் முதன்மையான
காரணம். இவற்றில் அதிக அளவு உப்பு இருப்பதால் அதனை வெளியேற்ற அதிக அளவு நீர்
தேவைப்படுகிறது. இது போன்ற உணவுகளை அருந்திவிட்டு போதுமான அளவு தண்ணீர்
குடிக்காததால் செரிமானப் பிரச்சனை ஏற்பட்டு வயிறு உப்பிசம் தோன்றும்.
மேலும் உணவை சரியாக மென்று சாப்பிடாதவர்களுக்கு வயிற்று உப்பிசம் ஏற்படும். நொறுங்கத்தின்றால் நூறுவயது அதாவது உணவை நன்கு
கடித்து அரைத்து மென்று சாப்பிட்டால் வயிற்றில் அமிலம் போதுமான அளவு சுரக்கும்.
நன்கு அரைத்து சாப்பிடாத உணவைச் செரிக்க வயிறு கூடுதலான அமிலம் சுரக்கும். இதனால்
வயிற்றில் வாயு, வலி தோன்றும்.
இரவு உணவும் உப்பிசமும்:
இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல்
இருப்பது, இரவு உணவிற்கும் படுப்பதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி
இல்லாமல் இருப்பது ஆகியவை காரணம்.
உடல் உழைப்பும் உப்பிசமும்:
”நாளெல்லாம் வினை செய்” என்று ஒவ்வை சொன்னது செரிமானத்திற்கு சேர்த்துதான். உடல்
உழைக்காமல் இருந்தால் செரிமானப்பிரச்சனை ஏற்படுவது உறுதி. எனவே வீட்டிலேயே
இருப்பவர்களும் , அலுவலகத்தில் பணி புரிபவர்களும், காலாரா நடந்து சென்று இயன்ற
வேலைகளை தினமும் செய்துவர வேண்டும்.
நார்ச்சத்து அதிகம்
நார்ச்சத்து மிகுந்த
உணவுகளான காய்கறிகள் , கீரைகள், இவற்றை சாப்பிடுவது மலச்சிக்கலை தவிர்க்கும்.
இதனால் வயிறு உப்பிசம் ஏற்படாது.
உணவை தவிர்ப்பது
அன்றாட பணிகளில்
முழுவதுமாக மூழ்கி வேலை செய்யும் பலர் குறித்த நேரத்தில் உணவு சாப்பிட
மறந்துவிடுவார்கள் அல்லது தவிர்த்துவிடுவார்கள். இதனால் வயிறு உப்பிசம் ஏற்படுவது
மட்டுமின்றி உடலில் கெட்ட கொழுப்புகள் தோன்றுவதற்கும் வழி வகுக்கும். பசியில்லை
என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் பழங்கள், சூப், சாலட், இவற்றை சாப்பிட்டுவர
வேண்டும்
ரோஹிணி வழங்கும் தீர்வு
உணவின் அளவையும், நேரத்தையும்
முறைப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு வேளையும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பாக
ரூமி ஜீரணா கேப்சூல் 1, மற்றும் ரூமி லிவரம் கேப்சூல் 1 சாப்பிட்டு, உணவுக்கு பின்
ரூமி வில்வா பானம் மற்றும் ஜிட்பள்ஸ் மாத்திரை ஒவ்வொன்று வீதம் சாப்பிட்டுவர
வயிற்று உப்பிசம் அதனால் ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவை தீரும்.
தொடர்புக்கு :
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037
தொலைபேசி
கிளை எண்கள் :
சென்னை 99401 27201
புதுச்சேரி 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் 94440 00837
பரமத்தி வேலூர் 93601 11119
திருநெல்வேலி 98421 52809
பெங்களூரு 93795 55833
மதுரை 8903421490
சமூக வலைதளங்கள் :
Twitter - @rohiniherbalaya
No comments:
Post a Comment