Tuesday, September 29, 2020

பல் போனால் சொல் போகும்...

  

                                    


ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான். வாயை  'உடலின் நுழைவாயில்' என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு
 பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். 'பல்'லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம்.

 

பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி? பற்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி? பல் மருத்துவர்கள் விரிவாக ஆலோசனை தருகிறார். 


பல்லின் அமைப்பு

.    "பற்களை மொத்தம் 8 வகையாகப் பிரிக்கலாம். அதிலும், இடப்பக்கம் எட்டும் வலது பக்கம் எட்டும் என மேல் அடுக்கு 16 அதன் கண்ணாடி பிரதிபலிப்பைப் போல கீழ் அடுக்கு 16 என, ஒரு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு  மொத்தம் 32 பற்கள் உள்ளன. 

    'பல் போனால் சொல் போகும்' என்னும் பழமொழிக்கேற்ப, நாம் பேச உதவுபவை பற்கள்தான். நாம் பேசும்போது குரல்வளையில் இருந்துவரும் காற்றானது பற்களின் இடுக்குகளில் மோதி வெளிவரும்போது குரல் பிறக்கிறது. பல் ஆரோக்கியம் என்பது முக அழகுக்காக மட்டுமல்ல... இதயநோய்கள், சர்க்கரை நோய்கள், வயிற்றுக்கோளாறுகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில்தான் பிரதிபலிக்கும். 

 

வாய் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்கள்

1. பல் சொத்தை

2. நீண்ட நேரம் பற்களுக்கு இடையில் உணவு இருப்பதாலோ சரியாக பல் துலக்காததாலோ பல் சொத்தை ஏற்படும். 

3. எச்சிலில் உள்ள ஆசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இரண்டும் சேர்ந்து பல் சொத்தையை உருவாக்கும். 

4. பல் கறைகள்

5. புகையிலைப் பொருள்களை நீண்ட நேரம் வாயில் வைத்திருப்பது, மதுப்பழக்கம், டீ, காபி போன்றவற்றை அதிக அளவு குடிப்பது, சரியாகப் பல் துலக்காதது  போன்ற செயல்களால் பற்களில் கறை உண்டாகும்

6. சிலருக்கு பிறப்பு முதலே கறை இருக்கும். குடிக்கும் நீரில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பற்களில் கறை உண்டாகலாம்

7. பல் வலி

8. பல் சொத்தை வளர்ந்து பெரிதாகும்போது பல்லின் வேரைத் தாக்கும். அப்போது பல் வலி ஏற்படும்.

9. வாய் துர்நாற்றம் 

10. வயிற்றில் கோளாறுகள் ஏற்படும்போது, அதில் உள்ள அமிலங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். 

11. அல்சர் நோய் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்னை இருக்கும்

12. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலோ, நாக்கில் எச்சில் சுரக்காமல் போனாலோ,  தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பி, சுரத்தலில் தடைகள் ஏற்பட்டாலோ, உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் பிரச்னைகள் இருந்தாலோ, உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் தங்கினாலோ, அசிடிட்டி ஏற்பட்டாலோ வாய் துர்நாற்றம் ஏற்படலாம். 

13. பற்களின் இடுக்குகளில் கிருமிகள் சேர்வதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். 

14. சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

15. ஈறுகளில் வீக்கம்...

16. பற்கள் மீது பாக்டீரியாக்கள் படிவதால் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். 

17. முறையாக பற்களைப் பராமரிக்காவிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஈறுகள் வீங்கிவிடும். வைரஸ் கிருமி தொற்று, மனஅழுத்தம், சர்க்கரைநோய், குடிப்பழக்கம், புகையிலைப் பழக்கம், கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும்

18. பற்கூச்சம்

19. எனாமல் தேய்வதாலும், அதிகக்  குளிர்ச்சி அல்லது சூடான உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் பற்கூச்சம் ஏற்படும்.

 

பற்களின் ஆரோக்கியத்தைப் பதம்பார்க்கும் எட்டு பழக்கங்கள்!

- அதிகப்படியான இனிப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும், அவற்றை நீண்டநேரம் வாயில் வைத்திருப்பதால் பல் சொத்தை, பல்வலி, பற்சிதைவு போன்றவை ஏற்படும்.

- சோடா, கார்பனேட்டட் பானங்கள், டீ, காபி போன்றவற்றை  அதிகம் பருகக்கூடாது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை பல்லின் எனாமலை பாதிக்கும். மாறக, இளநீர், பழச்சாறு பருகலாம்.

- புகைப்பழக்கம், பாக்கு போடுபவர்களுக்கு ஈறுகளில் பாதிப்பு ஏற்படும். அவை, பற்கள் விழுவதற்கான  வாய்ப்புகளை அதிகமாக்கும். மேலும், பற்களில் கறையையும் உண்டாக்கும்.

- குழந்தைகள் பால் குடித்தபின்னர், பற்களை சுத்தம் செய்யாமல் விட்டால் பால் பற்களைப் பாதிக்ககூடும்

- பற்களை பாட்டில்களின் ஓப்பனராகப் பயன்படுத்துவது. பாலித்தின் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து கிழிப்பது போன்ற செயல்களால் பல்லின் உறுதித் தன்மையில் பாதிப்பு ஏற்படும்.

- நகம் கடித்தல், கோபம் அல்லது மனஉளைச்சலின்போது பற்களைக் கடித்தல் போன்ற பழக்கங்கள் பற்சிதைவை உண்டாக்கக்கூடும். பற்கள் தேயக்கூடும்.

- சீரற்ற முறையில் பல் துலக்குவதால் பற்களின் எனாமல் பாதிக்ககூடும்

- குளிந்த மற்றும் சூடான உணவுகளை உண்ணுவது பற்கூச்சத்தை ஏற்படுத்தும்.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

- உணவு உண்ட பின்னும் குளிர்பானங்கள் அருந்திய பின்னும் வாய்    கொப்பளிக்க வேண்டும்.

- சாப்பிட்ட பின்னர், இளஞ்சூடான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே ஒட்டிக்கொண்டுள்ள உணவுத் துணுக்குகளை நீக்க உதவும். மேலும், வாய் துர்நாற்றம் ஏற்படாது இருக்க உதவும்

- 'பாயில் இன்ஃபெக்சன்' ஏதேனும் ஏற்பட்டிருப்பின், பல்துலக்கும் பிரஷ்ஷை மாற்றலாம்.

- ஒரு நாளைக்கு  குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். 

- மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூட் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

பல் மற்றும் ஈறுக்களுக்கு இடையே பிளாக் (Plaque) என்னும் மஞ்சள் நிறக் கறை படிந்து இருந்தாலோ பல் துலக்கும்போது அவற்றில் இருந்து ரத்தம் வந்தாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும்.

 

ரோஹிணி வழங்கும் தீர்வு






  • இயற்கை மூலிகைகள் அடங்கிய ரூமி குளோடென்ட் தினமும் இரண்டுமுறை பல் துலக்கி வர ஈறுகளில் இரத்தம் வடிதலை நிறுத்தி பற்களை வலுப்படுத்திகிறது. நாவில் படியும் படலங்களைத் தடுத்து பற்களை வலிமை ஆக்குகிறது
  • மேலிம் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/glodent/






  • இயற்கை மூலிகைகள் கலந்த ரூமி ஹெர்பல் ஃப்ரஷ் தினமும் உணவருந்திய பின்பு பயன்படுத்தி வர வாய் துர்நாற்றத்தைப் போக்கி வாய்ப்புண்களை குணப்படுத்துகிறது. 
  •       மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/herbal-fresh/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி – 9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                        –  99401 27201

புதுச்சேரி                                                         –  94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்      –  94440 00837

பரமத்தி வேலூர்                                           –   93601 11119

திருநெல்வேலி                                             –   98421 52809

பெங்களூரு                                                     –   93795 55833

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 
 





Friday, September 25, 2020

தலைவலி எதனால் வருகிறது தெரியுமா?

 



தலைவலி  என்றாலே உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விளங்கும் “பெய்ன்கில்லர்’ எல்லாம், உடலுக்கு கேடானது.

 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், “மைக்ரேன்’ என்று சொல்லப்படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.



இந்தக் காரணங்களால் கூட தலைவலி ஏற்படுமா!? 

வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வரலாம்.

 ·         டிரைஜெமினல் நியூரால்ஜியா

·     40 வயதிற்குப் பிறகே பெரும்பாலும் தாக்கக் கூடியது. ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப்பு உண்டு. மின் அதிர்வு போல வலி இருக்கும்.

·    கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு பக்கமாக வலிக்கும். ஒற்றைத் தலைவலியைப் போல மெல்லுதல், பேசுதல், விழுங்குதல், குளிர்நீரில் முகம் கழுவுதல், பல் துலக்குதல் போன்ற எது வேண்டுமானாலும் வலியைத் தூண்டலாம்.

·         கண் தொடர்பான நோய்கள்

·    ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால் கண்ணில் மட்டுமின்றி தலைவலியும் ஏற்படலாம்.

·         பக்கவாதம்

·    இரத்தக் கொதிப்பால் மூளையின் ரத்தக் குழாய் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் தமனி வெடித்துவிட வாய்ப்பு உள்ளது.

·    இதனால், ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது மூளை வீங்கத் தொடங்கும். மூளை வீங்கும்போது மூளையின் உறை இழுபடும். இதனால் கடுமையான தலைவலி ஏற்படும்.

·         தலைச்சுற்றல்

·    இது காதின் மையப்பகுதியின் நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் ஏற்படும் நோய். நோயாளிகளுக்குக் கழுத்து மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றலுடன் வாந்தியும் இருக்கும். உளவியல் ரீதியான பிரச்சனைகள்

·    மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை செய்யும் எண்ணம் ஆகியவை ஒற்றைத் தலைவலி நோயாளி களுக்கு அவ்வப்போது வந்து போகும்.

·         சைனஸ் தலைவலி

·    கண்களுக்கு கீழே உள்ள எலும்பறைகளில் காற்றுக்குப் பதிலாக நீர் கோர்த்துக் கொண்டு தலை வலி ஏற்படும்.

·         பல் நோய்கள்

·    பல்லில் அடிபட்டாலும், நோய்த் தொற்று ஏற்பட்டாலும், தலைவலி ஏற்படலாம். 

·    குளிர்ந்த அல்லது சூடான பானம், பல்லில் படும்போது வலி தீவிரமாகும்.

·    மிகக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும்.

·         தைராய்டு குறைவு

·    தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறையும்போது தலைவலி வரலாம். சரியான ஹார்மோன் சிகிச்சை அளித்த பிறகு வலி போய்விடும்.

 

 

தலைவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை

·    நேரத்தை சரியாக திட்டமிடவும். உறங்கவும், விழிக்கவும் நேரத்தை நிர்ணயிக்கவும்.

·    முறையான சத்தான சமச்சீர் உணவை உட்கொள்ளவும்

·    ஒழுங்கான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்.

·    தலைவலியைத் தூண்டும் காரணிகளை அடையாளம் கண்டு தவிர்க்கவும்.

·    வலி ஏற்படும் சந்தர்ப்பம் மற்றும் சாத்தியமான தூண்டு காரணிகளைக் குறித்து வைக்கவும்

·    தூண்டு காரணிகளைக் கட்டுப்படுத்தினால், அதனால் பயன்படுத்தும் மருந்தின் அளவு குறையும்.

·    தரப்படும் மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ளவும்.

·    எரிச்சலூட்டும் உரத்த இரைச்சலைவிட்டு விலகி இருக்கவும்.

·    முடிந்தவரை வெயில்படாமல் ஒதுங்கி இருக்கவும்.

·    வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

 

தலைவலி நீங்க ரோஹிணியின் தீர்வு




·     தினமும் ரூமி மைக்ரோசான் பயன்படுத்தி வர தலைவலி அறவே நீங்கும்

·     பலவித காரணங்களால் தோன்றும் தீரா தலைவலிக்கும் தீர்வளிக்கிறது

·     சைனஸ் பிரச்சனை மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்குகிறது

.     மேலும் மைக்ரோசான் பற்றிய விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/migrozen/  லிங்க் கிளிக் செய்து உள்ளே செல்லவும்


·     தினமும் ரூமி மைக்ரோசான் உடன் ரூமி ரிலாக்சான் தைலம் தடவிக்  கொண்டால் நீரேற்றம், ஜலதோசத்திற்கு நிவாரணம் அளிக்கிறது

.    மேலும் ரிலாக்சான்  பற்றிய விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/relaxon/  லிங்க் கிளிக் செய்து உள்ளே செல்லவும்


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி – 9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                        –  99401 27201

புதுச்சேரி                                                         –  94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்           –  94440 00837

பரமத்தி வேலூர்                                           –   93601 11119

திருநெல்வேலி                                             –   98421 52809

பெங்களூரு                                                     –   93795 55833

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 
 



Wednesday, September 16, 2020

இருப்பது ஒன்றுதான்

 

இருப்பது ஓர் இதயம் தான் என்பதால் அதனை கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம்'' 




       இதய நல ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்,கொழுப்புள்ள உணவுகள், தைராய்டு நோய், மன அழுத்தம், குறைவான உடல் செயல்பாடுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மரபியல் காரணி மற்றும் சமூகத் தொடர்பின்மை போன்றவையே இதய நோய்களை அதிகரிக்கக் கூடிய முக்கியமான ஆபத்துக் காரணிகளாக உள்ளன என்று ஆய்வில் தெரிவிக்கின்றன.

 

            நமது ரத்த ஓட்ட மண்டலத்தின் மையமாக இருக்கும் ஒரு தசையாலான உறுப்பே இதயம். இது தமனி, சிரை மற்றும் ரத்த நுண்குழாய்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னல் அமைப்பில் அமைந்திருக்கிறது. நமது உடலிலிருந்து ரத்தத்தை இதயத்துக்கும், இதயத்திலிருந்து பிற உடல் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும் பணியை இந்த ரத்தக் குழாய்கள் செய்கின்றன. இப்படி மூளை, நுரையீரல், சிறுநீரகம் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தை வழங்கும் இதயம் மற்றும் அதற்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதால் இதய நோய் ஏற்படுகிறது. இதுபோன்ற இதய நோய்களே ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்புக்கு ஒரு முக்கியக் காரணியாக உள்ளது.
 

இதய நோய்களால் உலகளவில் ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் மரணமடைகின்றனர். 2030-ல் இதுவே 2.3 கோடியை எட்டக்கூடும். இந்தியாவில் Non-communicable disease என்கிற வகையில் இதய நோயால் மட்டும் 26 சதவிகிதம் பேர் இறக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு புள்ளி விவரம்.

 

ஏன் வருகிறது? 
  •  நம் வீட்டிலுள்ள சைக்கிள், பைக், கார் போன்ற வாகனங்களை அதிக நாட்கள் பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் வைத்துவிட்டால் அது தூசி அடைந்து, அதிலுள்ள ஆயில்கள் உறைந்து போவதால் அதன் இயக்கம் தடைபடுகிறது

  • அதுபோல நமது உடல் செயல்பாடுகள் மற்றும் இயக்கங்கள் குறைகிறபோது இதயத்தின் செயல்பாடுகள் குறைந்து அதுவே நாளடைவில் மாரடைப்பு போன்ற பிற இதய நோய்கள் ஏற்பட காரணமாகிறது
      
  •    உடல்நலம் மட்டுமின்றி மனநலம் சார்ந்த பாதிப்புகளும் இதய நோய்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.

  •       தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் நிலை தற்போது இளம் வயதினர் செல்போன், கணினி ஆகிய திரைகளிலும், முதியவர்கள் தொலைக்காட்சி திரைகளிலும் தங்களின் நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனர்.
     
  •      இதனால் தொழில்நுட்ப சாதனங்களின் திரைகளுக்கு அடிமையாகும்(Screen addiction) அதிகரித்து வருகிறது. 

  •      இதுபோல செல்போன், இணையம் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் திரைகளுக்கு அடிமையாவதால் நமது மூளையின் சிந்தனைத்திறன், செயல்பாடுகள் பாதிக்கப்படுவதோடு மனநிலையும் பாதிக்கப்படுகிறது. 

  •      எனவே, இந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் தேவை அறிந்து சரியான அளவில் பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்னைகளை நாம் தவிர்க்கலாம். அது இதயம் காக்கவும் பெரிதாக உதவும்.  

 நடக்கும் பழக்கம் அவசியமா? 

  1. அந்த காலத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம், கோவில் போன்ற இடங்களுக்கு வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தோம் அதன் பிறகு பேருந்து ஏறி செல்லும் பழக்கம் இருந்தது. மேலும் நடைப்பயிற்சி என்பது நமது பல்வேறு வாழ்வியல் தேவைகளோடு இணைந்து இருந்தது. ஆனால் தற்போது அந்த நடக்கும் பழக்கம் காணாமல் போய்விட்டது.

  2. எங்கு சென்றாலும் வீட்டிலிருந்தே ஆட்டோ, பைக்குகளில் செல்வது, அருகிலிருக்கும் இடங்களுக்குக்கூட வாகனங்களில் செல்வது என்று நம்மிடையே நடக்கும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது.

  3. இந்நிலையை மாற்றி நடக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். லிஃப்ட்களில் ஏறிச் செல்வதைச் தவிர்த்து, படிக்கட்டுகளில் ஏறிச் செல்லலாம். நேரம் கிடைக்கிற பொழுதும், நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறபோதும் கண்டிப்பாக நடக்க வேண்டும்.


  வேறு என்ன செய்ய வேண்டும்?

  •  தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா பயிற்சி செய்வது அல்லது மைதானங்களில் விளையாடும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடல் எடையை சரியாக பராமரிக்கலாம். 

  •   அதேபோல சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் அதிக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • மீன், முட்டை போன்ற புரதச் சத்துள்ள உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 

  • அதிக கொழுப்பு மற்றும் அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். புகை, மது மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

  • 40 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாரடைப்பு நோய்க்கான ஆபத்துக் காரணிகளை அதிகமாக உடையவர்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதனைகள் செய்து, மருத்துவர் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வதன் மூலம் இதய நோய் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்.

 ரோஹிணியின் மூலிகைத் தீர்வு?

 - ஒரு ஸ்பூன் ரூமி ஆரோக் தூளை ஒரு கப் நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கொதிக்க வைத்தப் பின் வடிகட்டி பால் அல்லது வெந்நீர் சேர்த்து அருந்த இதயம் பலப்படும்.

 - இதில் தாமரையின் நற்குணங்கள் அடங்கியுள்ளதால் இதயத்தை பலப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்

 - தினமும் ஏற்படும் சோர்வைப் போக்கி சுறுசுறுப்பாக இயங்க ரூமி ஆரோக் உதவியாக இருக்கும்

 - தினமும் அருந்துவதால் மன அழுத்ததைப் போக்குகிறது

 - மேலும் விவரங்களுக்கு 
   http://rohiniherbalaya.com/product/arogh/ 



தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி – 9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                        –  99401 27201

புதுச்சேரி                                                         –  94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்           –  94440 00837

பரமத்தி வேலூர்                                           –   93601 11119

திருநெல்வேலி                                             –   98421 52809

பெங்களூரு                                                     –   93795 55833

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 
 

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...