”இருப்பது ஓர் இதயம் தான் என்பதால் அதனை கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம்''
இதய நல
ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது.
நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்,கொழுப்புள்ள உணவுகள், தைராய்டு நோய், மன
அழுத்தம், குறைவான உடல் செயல்பாடுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மரபியல் காரணி
மற்றும் சமூகத் தொடர்பின்மை போன்றவையே இதய நோய்களை அதிகரிக்கக் கூடிய முக்கியமான
ஆபத்துக் காரணிகளாக உள்ளன என்று ஆய்வில்
தெரிவிக்கின்றன.
இதய நோய்களால்
உலகளவில் ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் மரணமடைகின்றனர். 2030-ல் இதுவே 2.3 கோடியை
எட்டக்கூடும். இந்தியாவில் Non-communicable disease என்கிற வகையில் இதய நோயால்
மட்டும் 26 சதவிகிதம் பேர் இறக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு
புள்ளி விவரம்.
- நம்
வீட்டிலுள்ள சைக்கிள், பைக், கார் போன்ற வாகனங்களை அதிக நாட்கள் பயன்படுத்தாமல்
ஒரே இடத்தில் வைத்துவிட்டால் அது தூசி அடைந்து, அதிலுள்ள ஆயில்கள் உறைந்து போவதால்
அதன் இயக்கம் தடைபடுகிறது
- அதுபோல
நமது உடல் செயல்பாடுகள் மற்றும் இயக்கங்கள் குறைகிறபோது இதயத்தின் செயல்பாடுகள்
குறைந்து அதுவே நாளடைவில் மாரடைப்பு போன்ற பிற இதய நோய்கள் ஏற்பட காரணமாகிறது
- உடல்நலம் மட்டுமின்றி மனநலம் சார்ந்த பாதிப்புகளும் இதய நோய்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.
- தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் நிலை தற்போது இளம் வயதினர் செல்போன், கணினி ஆகிய திரைகளிலும், முதியவர்கள் தொலைக்காட்சி திரைகளிலும் தங்களின் நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனர்.
- இதனால் தொழில்நுட்ப சாதனங்களின் திரைகளுக்கு அடிமையாகும்(Screen addiction) அதிகரித்து வருகிறது.
- இதுபோல செல்போன், இணையம் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் திரைகளுக்கு அடிமையாவதால் நமது மூளையின் சிந்தனைத்திறன், செயல்பாடுகள் பாதிக்கப்படுவதோடு மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
- எனவே, இந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் தேவை அறிந்து சரியான அளவில் பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்னைகளை நாம் தவிர்க்கலாம். அது இதயம் காக்கவும் பெரிதாக உதவும்.
- அந்த
காலத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம், கோவில் போன்ற இடங்களுக்கு வீட்டிலிருந்து
நடந்து சென்று கொண்டிருந்தோம் அதன் பிறகு பேருந்து ஏறி செல்லும் பழக்கம்
இருந்தது. மேலும் நடைப்பயிற்சி என்பது நமது பல்வேறு வாழ்வியல் தேவைகளோடு இணைந்து
இருந்தது. ஆனால் தற்போது அந்த நடக்கும் பழக்கம் காணாமல் போய்விட்டது.
- எங்கு
சென்றாலும் வீட்டிலிருந்தே ஆட்டோ, பைக்குகளில் செல்வது, அருகிலிருக்கும்
இடங்களுக்குக்கூட வாகனங்களில் செல்வது என்று நம்மிடையே நடக்கும் பழக்கம் மிகவும்
குறைந்து வருகிறது.
- இந்நிலையை மாற்றி நடக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். லிஃப்ட்களில் ஏறிச் செல்வதைச் தவிர்த்து, படிக்கட்டுகளில் ஏறிச் செல்லலாம். நேரம் கிடைக்கிற பொழுதும், நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறபோதும் கண்டிப்பாக நடக்க வேண்டும்.
வேறு என்ன செய்ய வேண்டும்?
- தினசரி
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா பயிற்சி செய்வது அல்லது மைதானங்களில் விளையாடும்
விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். இதன்
மூலம் உடல் எடையை சரியாக பராமரிக்கலாம்.
- அதேபோல
சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் அதிக காய்கறிகள், பழங்கள்,
தானியங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- மீன்,
முட்டை போன்ற புரதச் சத்துள்ள உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அதிக
கொழுப்பு மற்றும் அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். புகை,
மது மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
- 40
வயதுக்கு மேற்பட்டவர்களும், மாரடைப்பு நோய்க்கான ஆபத்துக் காரணிகளை அதிகமாக
உடையவர்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதனைகள் செய்து, மருத்துவர்
ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வதன் மூலம் இதய நோய் ஆபத்துகளைத்
தவிர்க்க முடியும்.
- இதில் தாமரையின் நற்குணங்கள் அடங்கியுள்ளதால் இதயத்தை பலப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்
- தினமும் ஏற்படும் சோர்வைப் போக்கி சுறுசுறுப்பாக இயங்க ரூமி ஆரோக் உதவியாக இருக்கும்
- தினமும் அருந்துவதால் மன அழுத்ததைப் போக்குகிறது
http://rohiniherbalaya.com/product/arogh/
தொடர்புக்கு :
தொலைபேசி – 9677009443 / 044 – 40194570
கிளை எண்கள் :
சென்னை – 99401 27201
புதுச்சேரி – 94421 29890
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் – 94440 00837
பரமத்தி வேலூர் – 93601 11119
திருநெல்வேலி – 98421 52809
பெங்களூரு – 93795 55833
சமூக வலைதளங்கள் :
No comments:
Post a Comment