Thursday, August 12, 2021

நீரிழிவுடன் நிம்மதியாக வாழ! இதப்படிங்க முதல்ல!

 



ஆரோக்கியமான ஒரு நபர் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தியாக மாறுகிறது மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதனை பார்ப்போம்.

உட்கொள்ளும் உணவு குளுக்கோஸ் ஆக மாறுகிறது

நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள். இந்த குளுகோஸ் இரத்தத்தில் கலந்து பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடல்செல்களுக்கு எடுத்துச்செல்கிறது.அதனால் உடல் இயக்கம் சீராக செயல்படுகிறது.

குளுகோஸ் செல்களுக்குள் செல்லுதல் 

கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றது. செல்களானது இன்சுலினை தங்களுக்குள் எடுத்துக் கொள்கிறது.

செல்கள் குளுக்கோஸ்-ஐ சக்தியாக மாற்றுகிறது - குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியாக உற்பத்தி செய்து தருகிறது.

சர்க்கரை நோய் இருக்கும் போது ஏற்படும் மாற்றங்கள்:

குளுக்கோஸ்-ஐ சக்தியாக மாற்றி சர்க்கரை நோய் கடினமாக்குகிறது.

ஏனெனில்

1. இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி ஆகாமல் இருத்தல்.

2. இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை

3. எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம். 

நீரழிவு நோயின் அறிகுறிகள்

நீரழிவு நோய் உள்ளவர்கள் பலவித்தியாசமான அறிகுறிகளை உணரலாம். அவற்றில் சில

-     அடிக்கடி சிறுநீர் கழித்தல் (இரவு நேரத்திலும்)

-     தோலில் அரிப்பு ஏற்படுதல்.

-     கண் பார்வை மங்கலடைதல்.

-     சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்.

-     பாதம் மறத்துப்போதல்

-     அதிகமான தாகம்.

-     காயங்கள் மெதுவாக ஆறும் தன்மை.

-     எப்பொழுதும் பசியோடு இருத்தல்.

-     எடைகுறைதல்.

-     தோல் வியாதிகள் ஏற்படுதல்.

-     சிந்திக்க முடியாத அளவு தலைபாரம்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்த நிலையிலிருப்பது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும்.

நீண்ட நாட்களாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்கு பின் இரத்தக்குழாய்கள், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் சிதைவு / பாதிப்புகளை ஏற்படுத்தி பல சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தும். கண், நரம்புகளில் நிரந்தர கோளாறுகளை ஏற்படுத்தும்.

நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதம் மற்றும் பிற உடல் உறுப்புகளில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். இரத்தக்குழாய்களில் நோய் ஏற்பட்டு இதயக்கோளாறு, பக்கவாதம்(ஸ்ட்ரோக்) மற்றும் இரத்தச்சுழற்சியில் பிரச்சினைகள் போன்றவை ஏற்பட வைக்கிறது.

கண்களில் ஏற்படும் கோளாறுகளான ரெடினோபதி (கண்களில் உள்ள இரத்தக் குழாய்கள் பாதித்தல்), க்ளுக்கோமா (கண்களுக்குள் இருக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகரித்தல்) மற்றும் கேட்டராக்ட் (கண்களின் கருவிழிப்படலத்தில் வெள்ளை நிற படலம் (வெண்புள்ளி)தோன்றி பார்வையை இழக்கச்செய்தல்) போன்றவை ஏற்படும்.

சிறுநீரகங்கள் இரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாதபடி சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்படும்.

ஹைப்பர்டென்ஷன் எனும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் சரியாக இரத்தத்தினை இறைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

சத்து குறைவு ஏற்பட்டு அது தொடர்பான நோய்கள் உருவாகும்.

சைலண்ட் டெத் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பு உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

நீரழிவு நோயினைக் கையாளுதல்

சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி திசரி காலை 1 மணி நேரம் செய்திடும் போது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். 

நீரழிவு நோய் ஏற்பட்ட பின் தோலில் ஏற்படும் மாற்றங்கள்

-     தோலின் வண்ணம், தன்மை மற்றும் தடிமனில் ஏற்படும் மாற்றங்கள்.

-     தோலில் ஏற்படும் கொப்புளங்கள், கட்டிகள் போன்றவை.

-     பாக்டீரியா தொற்றுவின் ஆரம்ப நிலைகளான, தோலின் நிறம் சிவத்தல், வீங்குதல், கொப்புளக்கட்டிகள், தோலின் வெப்பம் அதிகரித்தல்

-     ஆறாத காயங்கள்

சருமத்தைப் பராமரிக்கும் முறைகள்

தவறாமல் குளிப்பது மற்றும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.வெதுவெதுப்பான நீரில் குளிப்பது. அதிக சூடுள்ள நீரில் குளிப்பதை தவிர்த்தல் வேண்டும்.

குளித்த பின் உடல் பாகங்களை, குறிப்பாக இடுக்குகள் மற்றும் மடிப்புகளை நன்கு சுத்தமான துணியால் துடைத்து சுத்தம் செய்தல் வேண்டும்.

வறண்ட சருமத்தை சொறிவதைத் தவிர்க்கவும். ஏனெனில், வறண்ட சருமத்தை சொறியும் போது ஏற்படும் காயத்தின் மூலம், பாக்டீரியாக்கள் நுழைந்து நோயினை ஏற்படுத்தும்

தோலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்

காயங்களை பராமரித்தல்

சுத்தமான வெண்ணீர் மற்றும் சோப் கொண்டு அடிபட்ட காயங்களைக் கழுவ வேண்டும்.

சுத்தமான பான்டேஜ் கொண்டு காயத்தை மூடி வைக்கவும்.

-     முழுமையான சிகிச்சை இன்மையால் உடல் உறுப்புகள் இழப்போ(அ)உயிர் இழப்போ ஏற்படுவதனை தடுத்திட சிறிய காயத்தை கூட அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரிடம்தான் சிகிச்சை எடுக்க வேண்டும்.

பாதங்களைப் பராமரித்தல்

-     புண், வெட்டு காயங்கள், தடித்திருத்தல், கொப்புளங்கள், கீறல்கள் போன்றவை உள்ளனவா என்று பாதங்களை அவ்வப்போது பரிசோதித்து பார்த்தல் வேண்டும்.

-     கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

-     நகங்களை அவ்வப்போது வெட்டவும்

-     முடிந்த வரை கால் தோலினை அழுத்தாத,காயமேற்படுத்தாத காலணிகளைப் பயன்படுத்தி, பாதங்களை பாதுகாத்தல் வேண்டும்.

பற்களைப் பராமரித்தல்

-     பல் துலக்குதல்

-     மிருதுவான இழைகளைக் கொண்ட ப்ரஷ்களைப் பயன்படுத்தவும்.

-     ஒரு நாளுக்கு, இரண்டு முறை காலை,மாலை பல் துலக்கவும்.

-     பல் துலக்கும் போது, ப்ரஷ்-ன் இழைகளை, பல் மற்றும் ஈறுகளின் மத்தியில் வைத்து, லேசான அசைவினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதின் மூலம், இவ்விடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் (அ) உணவுத்துகள்கள் அகற்றப்படுகின்றன.

-     நாக்கு, கன்னத்தின் உட்புறம் மற்றும் பற்களின் உணவு அறைக்கும் பகுதிகளை லேசான அசைவினால் சுத்தம் செய்யவும்.

-     பல் துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஷ்-ன் இழை நுனியில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. சர்க்கரை நோயாளிகள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ப்ரஷ்-யை மாற்ற வேண்டும்.

-     ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்னர் பற்களில் படியும் அழுக்கினை சுத்தம் செய்வது (பல் இடுக்குகளில்) பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

கண்கள் பராமரிப்பு

நீண்டகாலமாக அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருந்தால், கண்களில் உள்ள சிறு இரத்தக்குழாய்களில் பாதிப்பினை ஏற்படுத்தி, ரெடினோபதி என்னும் நோயினை ஏற்படுத்தலாம். உண்மையில், இந்த ரெடினோபதி சர்க்கரை நோயாளிகளில் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் ஒவ்வொரு ஆண்டும் கண்களை முழுமையாக பரிசோதிப்பது அவசியம்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருப்பின் கண் மருத்துவரை உடனடியாக பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

-     புள்ளிகள், அலசலான பார்வை, மங்கலான பார்வை சிலந்தி வலை போன்று பார்வை சிதைவு, பார்வையின் போது கரும்புள்ளிகள், கண் வலித்தல் மற்றும் கண்கள் தொடர்ந்து சிவந்திருத்தல் போன்ற கண் பார்வை கோளாறுகள்.

-     நன்கு அறிந்த பொருட்களை சரியாக பார்க்க முடியாத நிலை, சாலை சிக்னலை சரியாக பார்க்க முடியாத நிலை மற்றும் படிக்க முடியாத பிரச்சினை மற்றும் வேறு வகையான கண்பார்வை கோளாறுகள் ஏற்படலாம்.

நீரழிவு நோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

இது நீரழிவு நோயாளியின் சத்து தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக,மாவு பொருட்கள்,சர்க்கரை உள்ளடக்கிய தானியம் போன்றவற்றின் அளவை மிகக்குறைவான அளவே சேர்க்க வேண்டும்

-     உருளைக்கிழங்கு,சர்க்கரை வள்ளிக் கிழங்கு,கொலஸ்ட்ரால் அதிகப்படுத்தும் நிலக்கடலை.

-     இனிப்பு வகைகள்.

-     எண்ணையில் வறுத்த பொருட்கள்.

-     காய்ந்து உலர்த்திய பழங்கள் மற்றும் கொட்டைகள்.

-     சர்க்கரை.

-     வாழை, சப்போட்டா, சீதா, மாம்பழம்,இளநீர் போன்ற பழவகைகள்.

 

1. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

இரண்டாம் வகை சர்க்கரை நோயால் ஏற்படக் கூடியவை.

-     பார்வை இழப்பு

-     மாரடைப்பு

-     சிறுநீரகக் கோளாறு

-     பக்கவாதம்

-     கால்களை இழத்தல்

-     கோமா மற்றும் இறப்பு

2. சர்க்கரை நோய் யாருக்கு ஏற்படும்?

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 

-     45 வயதுக்கு மேற்பட்டவர்கள்

-     பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள்

-     எடை அதிகமாக இருப்பவர்கள்

ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

3. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?

பல காரணங்களால் இது நிகழலாம்.

-     தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.

-     இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

 

மூலிகை மகத்துவம்

சீந்தில் கொடி

உடலில் இன்சுலின் உற்பத்தியின் அளவை நிர்வகிக்க சீந்தில் கொடி உதவியாக இருக்கும். சீந்தில் கொடி அதிகப்படியான குளுக்கோஸை எரிக்கவும், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.

ஆவாரம் பூ

ஆவாரம் பூவை கூட்டு அல்லது பொரியலாக செய்து சாப்பிடலாம். அல்லது அந்த பூக்களை வேகவைத்து அந்த நீரை தேநீருக்கு பதிலாக பருகலாம். இதன் மூலம் சக்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

நாவல்கொட்டை

இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என்று மூன்று சுவைகளும் நிறைந்த சுவையான கனி நாவல் பழம். மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும் இந்த நாவல் பழத்தில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, எரிசத்து நிறைந்திருக்கிறது. நாவல் பழங்கள் மற்றும் கொட்டைகள் இரண்டிலும் இருக்கும் ஜம்போலினின் மற்றும் ஜம்போசின் என்னும் குளுக்கோசைடு ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாறுவதை பொறுமையாக்குகின்றன. . இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நாவல் பழங்கள் மட்டும் அல்லாது அதன் கொட்டையும் அருமருந்தாக பயன்படுகிறது.

தாமரை

தாமரைப் பூ விதைகளில் கால்சியம், மக்னீசியம், இரும்புச் சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து செல்களை காக்கிறது. இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

கடுக்காய் தோல்

சித்தர் பாடலில்,

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலனாமே.

என்று கூறப்பட்டுள்ளது.

'அடுக்கடுக்காய் வந்த பிணியாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்' என்ற சொல்வழக்கு இதன் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.

கடுக்காயின் கடினமான தோல் பகுதியில்தான் மருத்துவ சக்தி இருக்கிறது. சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்

மருதம்பட்டை

எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் மருத மரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அளவற்ற மருத்துவ குணங்கள் பலவற்றைக் கொண்டது என்று மருத மரத்தின் புகழ் பாடுகின்றனர் சித்த மருத்துவர்கள். மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம் பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இந்த மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது.வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது.மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம்.மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.


டயாரன்

மூலிகை பானம்



-     நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது

-     இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகாமல் பாதுகாக்கிறது

-     அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்துகிறது

-     சீந்தில் கொடி, அருகம்புல், ஆவாரம் பூ, வெந்தயம், சர்க்கரைக்கொல்லி, பாகற்காய், நாவல்கொட்டை, இசப்பகுல் அடங்கியது. மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/diarun/


ஆவேரா ப்ளஸ்
உடனடி மூலிகை பானம்



- இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது
- நீரிழிவில் தோன்றும் அதிக பசி, அதிக தாகத்தைக் கட்டுப்படுத்துகிறது
- ஆக்ஸிகரண செய்கை இருப்பதால் செல்களில் உண்டாகும் பாதிப்பைத் தடுக்கிறது
- நீரிழிவால் ஏற்படும் சோர்வு மற்றும் அசதியைக் குறைக்கிறது
- மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/avera/






No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...